மருமகனுக்கு கத்திக்குத்து- மாமனாருக்கு போலீஸ் வலை..!

கோவை சுந்தராபுரம் முருகன் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் ( வயது 48) இவரது மகளை அதே பகுதியைச் சேர்ந்த வேலுமணி ( வயது 39) என்பவர் பெண் வீட்டின் சம்மதம் இல்லாமல் காதல் திருமண செய்துள்ளார்.இதனால் இவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் வேலுமணி நேற்று அங்குள்ள பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாமனார் வேல்முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேலு மணியை குத்தினார்.இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .இது குறித்து வேலுமணி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாமனார் வேல்முருகனை தேடி வருகிறார்கள்.