செல்போனில் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை – பட்டதாரி கைது..!

கோவை ஆர் .எஸ். புரம், திலகர் வீதியைச் சேர்ந்தவர் விஷ்வ தர்ஷினி ( வயது 43 ) கணவரிடம் விவாகரத்து பெற்று தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இவர் 12 -10- 20 23 அன்று தஞ்சாவூர் கோவிலுக்கு சென்றார் .அப்போது அவருக்கு அங்கு வைத்து திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவரிடம் தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு, செந்தமிழ் நகரை சேர்ந்த அருண்குமார் ( வயது 42 ) என்பவர் மருத்துவ பிரதிநிதி என்று கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.விஷ்வ தர்ஷினிக்கு வேண்டிய மாத்திரைகளை வாங்கி கொடுத்தார். பின்னர்  விஷ்ணு தர்ஷினி கோவைக்கு வந்து விட்டார் அருண்குமார் தொடர்ந்து அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி,செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாராம்.இது குறித்து ஆர் .எஸ் .புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை தஞ்சாவூருக்கு சென்று நேற்று கைது செய்தார் .இவர் எம்.எஸ்.சி. முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தாராம். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.