கடும் கோதுமை தட்டுப்பாட… ரயில் மூலம் கோவை வந்தடைந்த 1,800 டன் கோதுமை..!

கோவை மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்தடைந்த 1800 டன் கோதுமைகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலம் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கோதுமை விநியோகம் ரேஷன் கடைகளில் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை வழங்குவதற்காக வட மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் 1800 டன் கோதுமை கோவை மாவட்டத்திற்கு வந்தடைந்தது. இந்த கோதுமை வரும் நாட்களில் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.