அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில்பாலாஜி – ஆளுநர் மாளிகை ஏற்பு.!!

செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, வழங்கிய கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்ற ஆளுநர்:

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 12.2.2024 அன்று, தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அங்கீகரித்து ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.