கல்லூரி அருகே கஞ்சா, குட்கா விற்பனை – இருவர் கைது..!

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் செல்லமணி ஆகியோர் நேற்று சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 250 கிராம் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் சரவணம்பட்டி , தச்சன் தோட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சன் குமார் ( வயது 21) விநாயகபுரத்தை சேர்ந்த அன்பு செல்வன் ( வயது 17) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..