தனியாக நடந்து சென்ற பள்ளி ஆசிரியையின் தாலி சங்கிலி பறிப்பு – திருவள்ளூரில் பகீர் சம்பவம்.!!

திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி விஜயலட்சுமி வயது 42. இவர் பூண்டியை அடுத்த வெள்ளாத்து கோட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து செல்லும் போது பின்னால் ஹெல்மெட் அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் விஜயலட்சுமியை மடக்கி நாங்கள் சிஐடி ஆபிசர் என மிரட்டும் தொனியில் கழுத்தில் கிடந்த ஏழு சவரன் தங்க சங்கிலியை லபக்கென்று பறித்து சென்று விட்டனர் .தங்க சங்கிலி பறிபோனதை கண்டு ஆசிரியை விஜயலட்சுமி தரையில் அழுது புரண்டார். பின்னால் வந்த பெண்கள் கஷ்டப்பட்டு சேர்த்த தங்கத்தை மீட்டு விடலாம் என ஆறுதல் வார்த்தை கூறி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். வடக்கு மண்டல போலீஸ் ஐஜி டாக்டர் என் கண்ணன் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் சரக டி ஐ ஜி பொன்னி மேற்பார்வையில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .லபக் ஆசாமிகளை நைலான் கயிற்று துணையோடு சுற்றி சுற்றி வருகின்றனர். என்று கூறினார்.  அரசு பள்ளியில் ஆசிரியரின் பறிபோன நகையின் மதிப்பு ரூபாய் 4 லட்சம் ஆகும்..