மூதாட்டி வீட்டில் நகை திருடியவர் கைது…

கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள காபி கடை, சிந்தாமணி நகரை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி வசந்தா ( வயது 62 )இவரது வீட்டில்எலக்ட்ரிக்கல் வேலை நடந்து கொண்டிருந்தது. இதனால் வசந்தாமணி வீட்டில் வெளியே நின்று கொண்டிருந்தார். வேலை முடிந்து சென்ற பிறகு வீட்டில் பீரோவை திறந்து பார்த்தார் அதில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை..இதுகுறித்து வசந்தா கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர்குரு சந்திர வடிவேல் வழக்கு பதிவு செய்துகொடைக்கானலைசேர்ந்த மணிகண்டன் பிரபு ( வயது 33) என்பவரை கைது செய்தார் .இவர் தற்போது பச்சாபாளையத்தில் தங்கி இருந்து எலக்ட்ரிகல் வேலை செய்து வந்தார்..இவரிடமிருந்து நகை மீட்கப்பட்டது.