ஓடும் பஸ்சில் திடீர் மாரடைப்பு. டிரைவர் சாவு …

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பக்கம் உள்ள கருப்புசாமி புதூரை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 55) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் உள்ள சின்னம்பாளையம் அருகே பஸ் ஒட்டி சென்றார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை யடுத்து பஸ்சை ஓரமாக நிறுத்தினார். அப்படியே “ஸ்டீரிங்கில்” மயங்கி விழுந்தார் ..அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார் .நெஞ்சு வலி ஏற்பட்டதும் வலியை பொறுத்துக் கொண்டே பஸ்சை ஓரமாக நிறுத்தியதால் பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர்..இது குறித்து மனைவி மாரியம்மாள் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.