கோவையில் 404 கிராம் தங்க நகை மோசடி …

கோவை பெரியகடைவீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில்நகைக் கடை நடத்தி வருபவர் ஸ்ரீதரன் (வயது 51)இவருக்கு அதே பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக நகை வியாபாரம் செய்து வரும் விச்சு என்ற விஸ்வநாதன் அறிமுகமானார். இவரிடம்ஸ்ரீதரன் 404.200 கிராம்எடையுள்ள தங்க நகைகளை கொடுத்து விற்று கொடுக்குமாறு கூறினார். விஸ்வநாதன் 404.200 கிராம்எடை கொண்ட தங்க நகைகள் பெற்றுக் கொண்டு பணம் கொடுக்கவில்லை. காலம் தாழ்த்தி வந்தார். பின்னர் தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் அவரது கடை மூடப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீதரன் கடைவீதி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.