நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி…

கோவை குனியமுத்தூர் ஜே. பி. நகரை சேர்ந்தவர் முகமது அலி .இவரது மனைவி ஜாஸ்மின் ( வயது 43) இவர் அதே பகுதி சேர்ந்த முகமது ரபிக் என்பவரிடம் தனது பழைய வீட்டை விற்றுநிலம் வாங்கித் தருமாறு கூறி ரூ 12 லட்சம் கொடுத்தார். முகம்மத் ரபிக் நிலம் வாங்கிகொடுக்கவில்லை. இதனால் ஜாஸ்மின் தான் கொடுத்த ரூ 12 லட்சத்தை அவரிடம் கேட்டார் .முகமது ரபிக் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இது குறித்து ஜாஸ்மின் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் முகமதுரபீக் மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.