சிங்காநல்லூர் பியூட்டி பார்லரில் விபச்சாரம் – தாய், மகன் கைது..!

கோவை சிங்காநல்லூர் காமராஜ் ரோட்டில் ஒரு பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக சிங்காநல்லூர் போலீசில் ரகுராம் ( வயது 29) என்பவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்த கோத்தகிரியை சேர்ந்த திரிஷா ( வயது 47) அவரது மகன் சிபின் (வயது 28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திரிஷா ஒண்டிப்புதூரில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.மகன் ஜிபின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.பியூட்டி பார்லர் மூடப்பட்டது.