ராஜ்பவனில் நாளை பொங்கல் விழா – முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு..!

மிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னை கவர்னர் மாளிகையில் நாளை 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில், ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றம் செய்து “தமிழகம்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.