10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பிளஸ்-1 படிக்கும் மாணவன்..!

ஊட்டி: நீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் சிறுமி படித்து வரும் அதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இருவரும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என்பதாலும், ஒரே பள்ளி என்பதாலும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் அந்த 17 வயது சிறுவன், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி மசினகுடி தொட்டலிங்கி பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். சம்பவத்தன்று சிறுமி வயிற்று வலியால் அலறி துடித்தார். உடனே அவரை குடும்பத்தினர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. டாக்டர்கள் விசாரித்த போது குழந்தையின் தாய் சிறுமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் மசினகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சிறுமி நடந்தவற்றை கூறினார். பின்னர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.