பிளஸ் 1 மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது-போக்சோவில் கணவன் கைது..!

கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அங்குள்ள ஒரு மேல்நிலைபள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அந்த மாணவிக்கும் அன்னூரைச் சேர்ந்த டிரைவர் பிரபாகரன் ( வயது 22 )என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது .இந்த நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார் .பின்னர் அவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த 20 ஆம் தேதி மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதை யடுத்து பிரபாகரன் காதல் மனைவியை பிரசவத்துக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் .அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் விசாரணை நடத்தியது பிளஸ் 1 மாணவி 17 வயதில் குழந்தை பெற்றது தெரியவந்தது .இது குறித்து டாக்டர்கள் கொடுத்த தகவலின்பேரில் அன்னூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.