பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு- தமிழில் 9 பேர் சதம்.!!

சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியானது. இதில் 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

தமிழ் பாடத்தில் 9 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரலில் நடத்தப்பட்டன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இந்த மாதம், 8ம் தேதி வெளியானது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலையில் வெளியான நிலையில், மதியம் 2 மணிக்கு பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்வெழுதியவர்களில் மொத்தம் 90.93 சதவீத மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7,549 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.மாணவர்கள், அரசு தேர்வுத்துறையின், https://www.tnresults.nic.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதளங்களில், மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண் விபரம் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணுக்கும், எஸ்எம்எஸ் வாயிலாக மதிப்பெண் விபரம் அனுப்பி வைக்கப்படுகிறது.பாட வாரியாக 100% மதிப்பெண் பெற்றவர்கள் பாடம் – மாணவர்கள் எண்ணிக்கை தமிழ் – 9 ஆங்கிலம் – 13 இயற்பியல் – 440வேதியியல் -107உயிரியல் – 65கணிதம் – 17தாவரவியல் – 2 விலங்கியல் – 34கணினி அறிவியல் – 940வணிகவியல் – 214கணக்கு பதிவியல் – 995பொருளியல் – 40 கணினி பயன்பாடு – 598 வணிக கணிதம், புள்ளியியல் – 132