வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் – 4 பேர் கைது.!!

கோவை : பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள தென் சங்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 30) இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோட்டூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சிவக்குமார், உடுமலை ராஜேஷ் ( வயது 42) சோமந்துறை சித்தூர் சபாபதி (வயது 52) தென் சங்கம்பாளையம் அழகுராஜ் (வயது 37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ. 15 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.