பாகிஸ்தானில் 9 இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. இவற்றில் 4 பாகிஸ்தானிலும், 5 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் நிகழ்ந்துள்ளன.
தாக்குதல் நடந்த இடங்கள்
- முசாபராபாத்
- கோட்லி
- குல்பூர்
- பிம்பர்
- சியால்கோட்
- சக் அமரு
- முரிட்கே
- பஹவல்பூர்
2025, ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசினார். பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள். இந்தத் தாக்குதலில் பல பெண்கள் தங்கள் கணவர்களை இழந்ததால், இந்த நடவடிக்கைக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டது. நேற்றைய தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவம் தனது சமூக ஊடகப் பக்கத்தில் “ஜெய் ஹிந்த், நீதி நிலைநாட்டப்பட்டது” என்று பதிவிட்டுள்ளது. இந்தியா நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலர் காயமடைந்துள்ளனர். PoK-வில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், வெடிப்புகளுக்குப் பிறகு நகரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் பலர் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் செய்தித்தாள் டான் செய்தியின்படி, இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று ஜெனரல் சவுத்ரி கூறியுள்ளார். இருப்பினும், இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.