பூக்களின் பேரரசாக மாறிய ஊட்டி!

நீலகிரி மாவட்​டம் ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா​வில் 128-வது மலர் கண்​காட்சி இன்று (மே 18) கோலாகலமாகத் தொடங்​குகிறது.ஆட்​சி​யர் லட்​சுமி பவ்யா தொடங்கி வைக்​கிறார்.

இதற்​காக பூங்​கா​வில் 10 லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்​டு, வண்ண மலர்களாக பூத்​துக் குலுங்​கு​கின்​றன. மலர் மாடம் உள்பட பல இடங்​களில் 50 ஆயிரம் மலர் தொட்​டிகள் வைக்​கப்​பட்டு உள்​ளன.

விழா​வின் முக்​கிய அம்​ச​மாக சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தின் பிரம்​மாண்ட நுழைவு​வா​யில் 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட கார்​னேசன் உள்​ளிட்ட மலர்​களால் அமைக்​கப்​பட்டு உள்​ளது.

மேலும், ஊட்டி மலை ரயில் என்​ஜின், மகாபலிபுரம் கோயில், திரு​வாரூர் தேர் உட்பட 26 அலங்​காரங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. இதே​போல குறிஞ்​சி, முல்​லை, மருதம், நெய்​தல், பாலை ஆகிய ஐவகை நிலங்​களை விளக்​கும் மலர் அலங்​காரங்​கள் இடம் பெற்​றுள்​ளன

மொத்​தம் 7 லட்​சம் மலர்​களால் அலங்​காரங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. கள்​ளிச்​செடி மாளிகை மற்​றும் கண்​ணாடி மாளிகை புதுப்​பிக்​கப்​பட்டு அங்​கும் அரிய​வகை தாவரங்​கள் மற்​றும் மலர் செடிகள் வைக்​கப்​பட்​டுள்​ளன. இதையொட்​டி, நீல​கிரி மாவட்​டத்​துக்கு இன்று உள்​ளூர் விடு​முறை அளிக்​கப்​பட்டு உள்​ளது.

சுமார் 200 போலீ​ஸார் பாது​காப்புபணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். மேலும் சுற்​றுலா பயணி​கள் வசதிக்​காக சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட உள்​ளன. மலர் கண்​காட்சி 10 நாட்​கள் நடக்​கிறது.