கோவையில் காந்தி ஜெயந்தியன்று மது விற்ற 36 பேர் கைது – 734 மது பாட்டில்கள் பறிமுதல்..!

கோவை:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலா் மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பீளமேடு, போத்தனூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை, புறநகர் போலீசார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில், தடையை மீறி மாநகரில் மது விற்ற 16 பேரும், புறநகரில் 20 பேரையும் கைது செய்தனர். போலீஸாா் அவா்களிடம் இருந்து 734 மது பாட்டில்கள், மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.