Oh! My God!! கோவில் திருவிழாவில் வினோதம்… போலீஸ்காரரின் கைவிரலை கடித்து குதறிய தொழிலாளி..!

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள நெல்லிக்குத்து பாறையை சேர்ந்தவர் பிரபு .இவர் கோட்டூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார் . இந்த நிலையில் நேற்று இவர் ஆழியாறு பக்கம் உள்ள கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தார். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ( வயது 27) என்ற தேங்காய் உரிக்கும் தொழிலாளி குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்தார் . இதை பார்த்த போலீஸ்காரர் பிரபு கணவன் -மனைவி சண்டையை தடுக்கச் சென்றார் .அப்போது அஜித்குமார் போலீஸ்காரர் பிரபுவுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு போலீஸ்காரர் பிரபுவின் ஆளகாட்டி விரலை கடித்து குதறினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆழியாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அஜித் குமாரை கைது செய்தனர். அவர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாது தடுத்தல், கொலைமிரட்டல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் திருவிழா பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரரின் கைவிரலை தொழிலாளி கடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பர பரப்பை ஏற்படுத்தியது.