கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த கேரள பெண் கைது …

கோவை போத்தனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று குறிச்சி பிரிவு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததாக ஒரு பெண்ணைகையும் களவுமாக கைது செய்தார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள கொட்டதாராவை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி சுமித்ரா (வயது 30) என்பது தெரிய வந்தது. இவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.இவர் கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து போத்தனூர் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் இவரிடம் விசாரணைநடந்து வருகிறது.