கோவையில் வாடகை வீடு எடுத்து கஞ்சா செடி பயிரிட்ட வடமாநில வாலிபர் கைது..!

கோவை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பின்டு கெவட் (வயது 25) இவர் கோவில்பாளையம் பக்கம் உள்ள செரையாம் பாளையத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.இவரது வீட்டில் கஞ்சா செடி பயிரிட்டு இருப்பதாக கோவில்பாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது . இன்ஸ்பெக்டர் சிவக்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 4 கஞ்சா செடிகள் உயரமாக வளர்ந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பின்டு கெவட் கைது செய்யப்பட்டார். 2 கிலோ எடை கொண்ட கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது .இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..