கோவை மே 8 பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் யூசுப் ( வயது 25))இவர் கீரணத்தம் பகுதியில் தனது அண்ணனுடன் தங்கி இருந்துஅங்குள்ள ராமகிருஷ்ணா நகர் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார்.நேற்று கட்டிடத்தில் வேலை செய்தார் அப்போதுதிடீரென்றுமின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து அவரது அண்ணன் முஸ்தாக் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் கட்டிட மேஸ்திரி கோவிந்தசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்சாரம் தாக்கி வட மாநில தொழிலாளி உயிரிழப்பு.
