காதல் தோல்வியால் வடமாநில வாலிபர் தற்கொலை..

கோவை:ஓடிசாவை சேர்ந்தவர் அமர்ஜித் ராணா ( வயது 27 )இவர் கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.அங்குள்ள குடியிருப்பில் தங்கி உள்ளார்.இவர் ஒரு பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.அந்த பெண்ணிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார்.அதற்கு அவர் இன்னும் 2 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்..இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அமர்ஜித் ராணா அவர் தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது அண்ணன் திலீப்குமார் ராணா நெகமம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.