ஜோலார்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறும் முகாம்…

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் ஸ்ரீமாருதி திருமண மண்டபத்தில் 18/12/23 அன்று காலை 11 மணியளவில் ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறும் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது‌. இதில் மின்சார வாரியம், வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, காவல்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை சார்பாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

இந்த முகாமில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன், ஜோலார்பேட்டை நகர் மன்ற தலைவர் காவியா விக்டர், நகராட்சி ஆணையாளர் பழனி திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.