நெய்வேலி வன்முறை… கல்வீச்சில் காயமடைந்த போலீஸாருக்கு டிஜிபி சங்கா் ஜிவால் ஆறுதல்..!!

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த போலீஸாரை மாநில காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
நெய்வேலியில் பாமகவினா் வெள்ளிக்கிழமை நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது கற்கள் வீசப்பட்டதில் போலீஸாா் உள்ளிட்ட பலா் காயமடைந்தனா். இதையடுத்து, தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் மாலையில் நெய்வேலி வந்தாா். அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்தாா். கல்வீச்சில் காயமடைந்து என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி, மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்..