வரும் வெள்ளிக்கிழமை காவிரி மேலாண்மை கூட்டம்: மேகதாது அணை குறித்து விவாதம்..!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு பதிவு செய்து வந்த நிலையில் 3 முறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில், வரும் புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.