தாய், மகனுக்கு கத்தி குத்து.!!

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் செல்வி ( வயது 50) இவரது மகன் விக்னேஷ் ( வயது 17) இவர் 74 வது டிவிஷன் இந்து முன்னணி பொறுப்பாளராக உள்ளார். இன்று காலையில் கோவில் விசேஷத்திற்காக சாணி வழிக்கும் போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருவருக்கும் கத்தி குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்தனர் .இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டபாணி ( வயது 50) என்பவரை கைது செய்தனர். இவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.