அமைச்சர் ராஜ்நாத் சிங் 5 நாள் பயணமாக மங்கோலியா, ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார்..!

புதுடெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மங்கோலியா, ஜப்பான் நாடுகளுக்கு செல்லவுள்ளார்.

இன்று புறப்படும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மங்கோலியாவில் தங்கியிருப்பார். அப்போது மங்கோலிய அதிபர் குரேல்சுக், ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சைகான் பயார் உள்ளிட்டோரை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசவுள்ளார்.

இதைத் தொடர்ந்து 8-ம் தேதியன்று ஜப்பான் செல்கிறார் ராஜ்நாத். அவருடன் வெளியுறவுஅமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும்இணைந்து கொள்வார். அப்போதுஜப்பான் பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் பேச்சுவார்த்தை நடத்துவார். அதைப்போல் ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஆய்வு செய்வதோடு, பாது காப்புத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவு படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஜப்பான் வெளியுறவுத் அமைச்சர் யோஷிமசா ஹயாஷி, பாதுகாப்பு துறை அமைச்சர் யசுகாஸு ஹமாடா உள்ளிட்டோர்தலைமையிலான குழு பங்கேற்கும். இத்தகவலை வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.