சினிமா தியேட்டர் முன்நின்று கொண்டிருந்த கார் மீது கல் வீசியவர் கைது

கோவை ஜூன் 25 பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு நேற்று குடிபோதையில் ஒருவர் சினிமா பார்க்கச் சென்றார்.அவர் குடிபோதையில் தியேட்டர் முன் நிறுத்தி இருந்த கார் மீது கல்வீசினார்.இதில் காரின் கண்ணாடி உடைந்தது.இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் செந்தில் ( வயது 55) புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி, சூளேஸ்வரன் பட்டி ,அழகப்பா நகரை சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் சம்ஷீர் ( வயது 28 )என்பவரை கைது செய்தனர்.இவர் அங்குள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.