மருதமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா.!!

கோவை அருகில் உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இது பக்தர்களால் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். முருக பெருமானுக்கு உகந்த சஷ்டி மற்றும் கிருத்திகை திருநாள் ஆகியவை நேற்று ஒன்றாக வந்தது. இதனால் மருதமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமான் காட்சியளித்தார். பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது..