பிளஸ் 1 மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்- வாலிபருக்கு 10 ஆண்டு சிறை..!

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 23) கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கும் கோவை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது .அந்த பழக்கும் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து சரவணன் அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருப்பூர் சேர்ந்த சிவா என்பவர் உடந்தையாக இருந்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்ததும் சிறுமியின் தாய் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சரவணன் ‘சிவா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யபட்டனர் . இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது .வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட சரவணனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய திருப்பூர் சேர்ந்த சிவா என்பவருக்கு போதிய முகாந்திரம் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்..