கலாக்ஷேத்ரா பாலியல் புகார்… கைதான ஹரிபத்மன் நீதிமன்ற காவலில் அடைப்பு..!

லாஷேத்ரா பாலியல் வழக்கில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஏப்ரல் 13 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு.

 சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான உதவிப்பேராசிரியர் ஹரிபத்மன், பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்தநிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக மாணவிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரப்போவதாக கூறியிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் இன்று மாணவிகளிடம் வாய்மொழியாக தெரிவித்தனர். மேலும் எழுத்துப்பூர்வ அறிக்கை அளிக்கும்வரை போராட்டம் தொடரும் என மாணவிகள் தெரிவித்திருந்தனர்.

 இந்த நிலையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட ஹரிபத்மனுக்கு, ஏப்ரல் 13 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.