சிஎன்சி ஆபரேட்டர் வீட்டில் நகை, வெள்ளி பொருள் திருட்டு..!

கோவை சரவணம்பட்டி, சங்கரா கல்லூரி ரோட்டில் உள்ள செந்தூர் புரத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 51) சி.என்.சி. ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார் . மாலையில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இதுகுறித்து சரவணன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..