கோவையில் கடன் சுமையால் இஸ்திரி தொழில் தூக்கில் தொங்கி தற்கொலை

கோவையில் கடன் சுமையால் இஸ்திரி தொழில் தூக்கில் தொங்கி
தற்கொலை

கோவை ராமநாதபுரம் பகுதியில் சேர்ந்தவர் . தண்டபாணி (46). இவர் துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவரது மூத்த மகள் திருமண செலவுகள் மற்றும் இரண்டாவது மகள் படிப்பு செலவு ஆகியவற்றிற்காக அதிக அளவு பணம் செலவானது. இதற்காக அவர் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது கடைக்கு புறப்பட்டு சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதை தொடர்ந்து அவரது மனைவி அங்கு சென்று பார்த்தார். அப்போது கடையில் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தண்டபாணி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இது பற்றி தகவல் அறிந்த இராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.