ரோட்டில் நடந்த சென்ற பெண்ணின் முன் நிர்வாணமாக நின்ற வாலிபர் கைது..!

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி .இவரது மனைவி நேற்று அங்குள்ள வலையன்குட்டை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது ஒரு வாலிபர் திடீரென்று அவர் ஆடையை கழட்டி விட்டு அந்த பெண் முன் நிர்வாணமாக நின்றாராம். பின்னர் அவரை உடலுறவுக்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்தாராம் .இதுகுறித்து அந்த பெண் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமியை கைது செய்தார். விசாரணையில் அவர் கிணத்துக்கடவு பக்கமுள்ள கோவில் பாளையத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் நாச்சியப்பன் ( வயது 30) என்பது தெரிய வந்தது. இவரது சொந்த ஊர் காரைக்குடி கோவில்பாளையத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.