பேங்க் லாக்கர் வைத்துள்ளீர்களா..? புதிய விதிகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி..!!

ங்களுக்கு பேங்க் சேப்டி லாக்கர் வசதி வேண்டும் என்றால், நீங்கள் கணக்கு வைத்திருக்கும், வங்கிக்கு சென்று குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி பெறலாம்.

நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப, உங்களுக்கான பெட்டாக வசதி ஒதுக்கப்பட்டு, அதற்கான சாவியும் ஒதுக்கப்படும். நீங்கள் சென்று கேட்டால் மட்டுமே சாவி கையில் கொடுக்கப்படும். வங்கி ஊழியர்கள் கூட, நீங்கள் என்ன பொருளை பேங்க் சேப்டி லாக்கரில் வைத்துள்ளீர்கள் என்று பார்க்கக் கூடாது.

பொதுவாக வீட்டில் பாதுகாப்பாக வைக்க முடியாத செல்வங்களை அதிக பாதுகாப்புடைய வங்கியின் லாக்கரில் வைப்பதுண்டு வாடிக்கையாளர்கள் லாக்கரை பயன்படுத்தி கொள்வதற்கு ஆண்டு தோறும் குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வங்கிகள் யாருக்கெல்லாம், லாக்கரை பயன்படுத்தும் வசதியை வழங்கலாம், அதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை தற்போது மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வங்கிகள் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களில் நியாயமற்ற விதிமுறைகள் அல்லது நிபந்தனைகள் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.2023 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் அனைத்து வங்கிகள் ஏற்கனவே இருக்கும் வங்கி லாக்கர் வாடிக்கையாளர்கள் உடனான லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பித்து தகுதி சான்று வழங்கவேண்டும். புதிய லாக்கர் விதிகள் அந்த தேதியில் இருந்து செயல்படுத்தப்பட வேண்டும்.வங்கிகள் வாடிக்கையாளருக்கு லாக்கரை ஒதுக்கும்போது அந்த வாடிக்கையாளரிடம் வங்கி முத்திரையிடப்பட்ட காகிதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டும், ஒப்பந்த பாத்திரத்தின் ஒரு நகலை வாடிக்கையாளரிடமும், அசல் வங்கியின் கிளையிலும் இருக்க வேண்டும்.

வங்கிகள் லாக்கர்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 180 நாள்கள் லாக்கர் அறையின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதியில் மற்றும் வங்கியின் பொதுவான பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவை கட்டாயம் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.

வழிகாட்டுதலின்படி, எந்தவொரு வாடிக்கையாளரும் தனது லாக்கரை அனுமதி இல்லாமல் அல்லது அதிகாரமும் இல்லாமல் திறக்கப்பட்டிருப்பதாக வங்கியில் புகார் கொடுத்தாலோ அல்லது திருட்டு அல்லது பாதுகாப்பு மீறல் நடந்துள்ளதாக தெரிவித்தாலோ, போலீஸ் விசாரணை முடியும் வரை வங்கிகள் சிசிடிவி பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும்.

லாக்கரிகளில் சட்டத்திற்குப் புறம்பான பொருள்கள் அல்லது அபாயகரமான சாதனங்களை வைக்கக் கூடாது என்பதை வாடிக்கையாளர்கள் உடனான ஒப்பந்தப் பத்திரத்தில் வங்கிகள் சேர்க்க வேண்டும். மேலும், வங்கி தனது வாடிக்கையாளர்கு மட்டும் அல்லாமல் வங்கிக்கு தொடர்பில்லாத பிற வாடிக்கையாளர்க்கும் லாக்கர் வசதியை அளிக்கலாம். வங்கிகள் கிளை வாரியாக காலியாக உள்ள லாக்கர் குறித்த விவரங்களை வெளிப்படையாக, அதனதன் இணையதளப் பக்கத்தில் வெளியிட வேண்டும். லாக்கர் கிடைக்காத வாடிக்கையாளர்களுக்கு காத்திருப்பு காலத்திற்கான பதிவு எண் வழங்கப்பட வேண்டும். வங்கி இணைப்பு, வங்கி கிளை வேறு இடத்திற்கு மாற்றம் மற்றும் வங்கி கிளை மூடப்படுவது போன்ற ஏதேனும் ஒரு நிகழ்வு இருந்தால் வங்கிகள் அதனை உள்ளூர் செய்தித்தாள் உள்பட இரண்டு செய்தித்தாள்களில் செய்திகள் வெளியிடப்பட வேண்டும். குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இதுகுறித்த தகவல்கள் அறிவிக்கப்பட வேண்டும்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் லாக்கர் வாடகை செலுத்தவில்லை என்றால் அவர்களது லாக்கரை உடைக்கவும் வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது. வங்கி லாக்கர்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மதிப்புமிக்க பொருள்கள் வங்கி ஊழியர்களால் மோசடி செய்யப்பட்டலோ, தொலைந்து போனாலோ, தீ அல்லது கட்டடம் இடிந்து விழுந்து லாக்கர் சேதமடைந்தாலோ வாடிக்கையாளர்களுக்கு வங்கி கட்டணத்தை விட 100 மடங்கு வரை வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

நில நடுக்கம், வெள்ளம், மின்னல், புயல் போன்ற இயற்கை பேரழிவு அல்லது வாடிக்கையாளர்களின் அலட்சியத்தினாலோ லாக்கரில் உள்ள பொருள்களுக்கு ஏதேனும் சேதமோ அல்லது இழப்போ ஏற்பட்டால் வங்கி பொறுப்பாகாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது