ஓடும் பஸ்சில் இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்-அரசு பஸ் கண்டக்டர் கைது.!!

திருவண்ணாமலையை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் .இவர் கோவையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்த நிலையில் சொந்த ஊருக்குச் சென்ற அந்த இளம்பெண் மீண்டும் கோவைக்கு வர முடிவு செய்தார். அதன்படி கடந்த 16ம் தேதி இரவில் திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு வந்தார் .அங்கிருந்து அரசு பஸ்சில் கோவை புறப்பட்டார். அந்த பஸ்சில் கண்டக்டராக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜய மங்கலத்தைச் சேர்ந்த பூவேந்திரன் (வயது 31) என்பவர் பணியாற்றினார். இந்த நிலையில் அவர் அந்த இளம்பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவரை கண்டித்தார் .ஆனாலும் அவர் பாலியல் தொல்லையை விடவில்லை .கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே பஸ் வந்ததும் பாலியல் தொல்லையை பொறுத்துக் கொள்ள முடியாத அந்தப் பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பின்னர் சக பயணிகள் அவருடன் விசாரித்தபோது கண்டு தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கதறி அழுதார் .மேலும் அவரை தாக்கினர் இதையடுத்து காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்துக்கு பஸ் வந்ததும் சக பயணிகள் உதவியுடன் கண்டக்டர் பூவேந்திரனை காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு நடந்த விசாரணையில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டக்டர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மானபங்கம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதான பூவேந்திரனுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. ஓடும் பஸ்சில் இளம் பெண்ணுக்கு அரசு பஸ் கண்டக்டர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.