35 பவுன் தங்கத்துடன் நகை தொழிலாளி ஓட்டம் – போலீஸ் வலைவீச்சு..!

கோவை :கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரதீஷ்குமார் (வயது 54) இவர் செல்வபுரம் சிவாலயா சந்திப்பில் தங்கி இருந்து இன்டீரியர் டிசைனர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு செல்வபுரத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர் அறிமுகமானார்.இவர் ரதீஷ்குமாரை கேரள மாநிலம் திருச்சூர் பக்கம் உள்ள அம்பாலுரை சேர்ந்த ஜோபி (வயது 44) என்ற நகை தொழிலாளிடம் அறிமுகம் செய்து வைத்தார். ரதீஷ்குமார் தன்னிடம் இருந்த 35 பவுன் பழைய நகைகளை ஜோபியிடம் கொடுத்து புதிய நகைகளாக செய்து கொடுக்குமாறு கூறினார். இந்த நகையுடன் ஜோபி எங்கோ மாயமாகி விட்டார்..அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரதீஷ்குமார் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து நகைத் தொழிலாளி ஜோபியை தேடி வருகிறார்.