கோவையில் கஞ்சா வியாபாரிகள் கைது – கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்..!

கோவையில் கஞ்சா வியாபாரிகள் கைது – கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்..

சிட்டி போலிஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை போலிஸார் ரோந்து பணியிலே ஈடுபட்டனர்.

இதில் உக்கடம் பகுதியில் கஞ்சா விற்ற கூலித்தொழிலாளி ராஜேஷ் கைது. ராஜேஷ் முன்னதாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 3 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.

ரத்தினபுரி பகுதியிலே கஞ்சா விற்ற தீபக் என்ற கூலித்தொழிலாளி கைது – தீபக் முன்னதாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்ட நிலையில் விசாரணை நடந்து வருகின்றன.

ராமநாதபுரம் பகுதியில் கஞ்சா விற்றதாக 17 வயது சிறுவன் (விக்னேஷ் – அலங்கார வேலை) கைது – இவன் மீது முன்னதாக மூன்று வழக்குகள் நடந்து வருகின்றன.

அதே பகுதியில் சக்திவேல் என்ற நபர் கஞ்சா விற்றதாக 17 வயது சிறுவன் (சக்திவேல் – அலங்கார வேலை) கைது.

தலைமறைவாக உள்ள இளங்கோவன் என்ற நபருக்கு போலிஸார் வலை.