கோவை துடியலூரை அடுத்த ரங்கம்மாள் காலனி முருகன் நகரை சேர்ந்தவர்
அஜித்குமார் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் கடந்த 5 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் அவரை காதலித்து வந்தார்.இந்த நிலையில் அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கு அஜித்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று அஜித்குமார் தன் காதலித்து வந்த பெண்ணிடம் திருமணம் செய்து
கொள்வது பற்றி பேசியதாக தெரிகிறது. அப்போது அந்த பெண் அஜித்குமாருக்கு
குடிப்பழக்கம் இருந்ததால் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்தார்.
அவர் அந்த பெண்ணை சமாதானம் செய்தும் அவர் மறுப்பு தெரிவித்ததாக
தெரிகிறது. இதனால் அஜித்குமார் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து
வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும்
இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார்
சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி
வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
குடிப்பழக்கத்தால் அடிக்கடி தகராறு: காதலி திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் தூக்குபோட்டு தற்கொலை..
