தனியார் வங்கியில் கடன் வாங்கி ரூ.24 லட்சம் மோசடி- 6 பேர் மீது வழக்குபதிவு.!!

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் 2-வது மாடியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு தனியார் பைனான்சில் மேனேஜராக வேலை பார்த்து வரும் அரவிந்த மற்றும் சம்சுதீன், பீர் மொய்தீன், சரவணன், விஜய ரேகா, ஸ்ரீநாத் ஆகியோர் 952 கிராம் எடை கொண்ட நகைகளுக்கு பதிலாக 420 கிராம் எடை கொண்ட நகையை அடகு வைத்து ரூ 24 லட்சத்து 73 ஆயிரத்து 962 கடன் வாங்கினார்களாம். அந்த நகையை எடை போட்டு பார்த்த போது மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அந்த தனியார் வங்கியின் மேலாளர் சிவ மண்டலா (வயது 35) சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் பைனான்ஸ் மேனேஜர் அரவிந்த், சம்சுதீன்,பீர் மொய்தீன், சரவணன் விஜய ரேகா ஸ்ரீநாத் ஆகியோர் மீது கூட்டுசதி, மோசடி ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.