கள்ளக் காதலனுடன் வசித்து வந்த மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து- கணவர் கைது..!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் ( வயது 49) கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 38) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் முத்துலட்சுமிக்குஅதே பகுதியில் வசித்து வந்த மாணிக்கம் என்பவருடன் காதல் ஏற்பட்டது.இதைய டுத்து முத்துலட்சுமி தனது கணவரை விட்டு பிரிந்து மாணிக்கத்துடன் கோவை போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம், கலைஞர் நகரில் வசித்து வந்தார்.நேற்று செட்டிபாளையத்துக்கு வந்த ரவிக்குமார் முத்துலட்சுமி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம்ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரவிக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் முத்துலட்சுமியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்..சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தப்பி ஓட முயன்ற ரவிக்குமாரைஅந்த பகுதியில் உள்ள மக்கள் பிடித்து செட்டிபாளையம் போலீசில் ஆஜர் படுத்தினர். போலீசார் அவரை கைது செய்தனர்.அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.