பயணிகளின் கவனத்திற்கு… ஜூலை 1 முதல் தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 50 % தொகை திருப்பித் தரப்படும்- ரயில்வேயில் அதிரடி மாற்றம்..!!

சென்னை: ஜூலை 1 முதல் தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 50 சதவீத தொகை திருப்பித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தட்கல்லில் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை ஏசி கோச்களுக்கும், ஸ்லீப்பர் கோச்களுக்கு காலை 11 மணி முதல் 12 மணி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம். சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் காகித டிக்கெட்டுகளுக்கு பதிலாக டிக்கெட் மொபைலில் அனுப்பப்படும். ரயில்வேயின் புதிய இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை வெவ்வேறு மொழிகளில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.