சென்னை மெரினா லூப் சாலையில் மீனவர்கள் 7வது நாளாக தொடர் போராட்டம்..!

சென்னை: சென்னை மெரினா லூப் சாலையில் மீனவர்கள் தொடர்ந்து 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சூழலில் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி ஆணையர் கக்கன் தீப்சிங் பேடி ஆகியோருடன் மீனவ பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு, ஒரு வழி பாதையாக வாகனங்கள் செல்ல மீனவர்கள் அனுமதி அளித்துள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.