கோவை : வடகோவை முத்துமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி அனிதா (வயது 29 ) இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் யூசுப் (வயது 19) குடிப்பழக்கம் உடையவர். இவர் தினமும் குடித்துவிட்டு வந்து அனிதாவிடம் தகராறு செய்வாராம். இந்த நிலையில் நேற்று வீட்டின் முன்நின்று கொண்டிருந்த அனிதாவை யூசுப் கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து யூசுப்பை கைது செய்தார் .இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply