போதை வேண்டாம் – பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி – கண்ணீர் விட்டு அழுத மாணவிகளின் நெகிழ்ச்சி சம்பவம்.!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் செயல்பட்டு வரும் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைபள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வேண்டாம் போதை என்ற தலைப்பில் மாணவ – மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுது. கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டு போதையினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து, மாணவர்கள் நல்வழியில் செல்வது குறித்தும் எடுத்தரைத்தனர். அப்போது பெற்றோர்கள் குழந்தைகள் மீது வைத்துள்ள அன்பு குறித்தும், மாணவர்கள் நல்வழியல் செல்வது குறித்து விளக்கி கூறப்பட்டது. அப்போது பெற்றோர்கள் கஷ்டங்கள் குறித்து எடுத்துரைத்த போது மாணவிகள் பலர் தங்களது பெற்றோர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு நெஞ்சை உருக்குவதாக இருந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சீனி, நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னணு, தொடர்பு பொறியியல்துறை தலைவர் தமிழ்ச்செல்வி, நூலகர் கருணைராகவன், உதவி பேராசிரியர் தம்பா, ரோகினி பிரிக்ஸ் துர்க்கராஜ், கே.ஆர்.சாரதா மேல்நிலைபள்ளி முன்னாள் மாணவர்கள் பிரவின்குமார், எழில், செல்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..