பொய்யர்களையும், துரோகிகளை நம்பி ஏமாற வேண்டாம்.. சிறப்பான ஆட்சி தான் இங்கு நடக்குது-அமைச்சர் உதயநிதி அட்வைஸ்.!

மிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இவர் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அதன்பிறகு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம், பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்கு கடன் உதவி திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம், புதுமைப்பெண் திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம் என பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வரும் தமிழக அரசை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குறை கூறுகிறது. மக்கள் இவற்றையெல்லாம் புறந்தள்ள வேண்டும். போலிகளையும், பொய்யர்களையும், துரோகிகளையும் நம்ப வேண்டாம். மேலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடப்பதால் எதிர்க்கட்சிகள் குறை சொல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உதயநிதி கூறினார்.