பிரிந்து சென்றதால் தகராறு: பெண் வங்கி ஊழியரை தாக்கிய கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது..!

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (33). ஆட்டோ
டிரைவர். இவரது மனைவி அனிதா (30). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை
செய்து வருகிறார்.இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அனிதா கணவரை பிரிந்து 2 மகன்களுடன் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று அனிதா வழக்கம் போல வேலைக்கு சென்றார். அப்போது மனைவியின் வீட்டுக்கு வந்த காசிநாதன் திடீரென அனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது அவர்களுக்க இடையே தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த காசிநாதன், அனிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். இதுகுறித்து அனிதா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காசிநாதன் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் ராஜா (வயது 43). ஆட்டோ டிரைவர். இவரது
பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சேகர். இந்த நிலையில் சேகர், ராஜாவின்
மனைவியிடம் பேசி வந்தார். இது ராஜாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்
சேகர் கண்டித்தார். அப்போது சேகர் இனி அவரிடம் பேச மாட்டேன் என உறுதி அளித்தார். சம்பவத்தன்று சேகர், அவரது நண்பர் மகேஷ் மற்றும் ராஜா ஆகியோர் வைசால் வீதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர்.
அப்போது திடீரென சேகருக்கும், ராஜாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு
தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சேகர் மற்றும் மகேஷ், ராஜாவை
தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினர்.
பலத்த காயம் அடைந்த ராஜா கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு
சேர்ந்தார். பின்னர் இதுகுறித்து ராஜா பெரியகடை வீதி போலீசில் புகார்
அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.