மதுரை மத்திய சிறையில் முதன் முறையாக வீடியோ, ஆடியோவுடன் டிஜிட்டல் நூலகத் திட்டம்..!

துரை மத்திய சிறையில் கைதிகளுக்காக பெரிய அளவில் நூலகம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இலக்கியம், கவிதை, நாவல் என பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கைதிகளுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில், தமிழகத்தில் முதல் முறையாக, கேபிள் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ ஒளிபரப்பு செய்யும் டிஜிட்டல் நூலக திட்டம், மதுரை சிறையில் துவக்கப்பட்டுள்ளது.